சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கள்ளக்குறிச்சி கலவரத்தின் கிளர்ச்சியாளர்கள் 4 பேர் கரூரில் சிக்கினர்!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சக்தி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து ஸ்ரீமதி பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். மேலும் முற்றுகை போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளி முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது, இதில் பள்ளி பேருந்துகள், மாணவர்களின் சான்றிதழ், ஆராய்ச்சி கூடத்தில் உள்ள கணினிகள் மொத்தமும் போராட்டக்காரர் தீ வைத்து எரித்தனர். மேலும் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த போலீஸ்காரர்களையும் போலீஸ் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் அடித்து துவம்சம் செய்தனர். இந்த சம்பத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நேற்று நடந்த கலவரத்தின் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது .
இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புரட்சி கலக மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணி சார்பில் சமூக வலைத்தளங்களில் தமிழ் அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மேலும் காவல் துறை தனது பணியை செய்ய தவறி விட்டது என கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது தொடர்பாக அந்த புரட்சிகர மாணவர் முன்னணி மாநில பொறுப்பாளர் சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய நண்பர்கள் சீலர் சமூக வளையத்தளங்களில் பகர்ந்த வந்த கரணத்தால், நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.